பஸ் – கார் மோதல் குழந்தை, தாத்தா பலி

திருமங்கலம்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காடனேரியை சேர்ந்தவர் செந்தில் (எ) சென்றாயபெருமாள் (36). மனைவி பிரியங்கா (30). மகள் சிவானிகா (2). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து மதுரை நோக்கி காரில் புறப்பட்டார். இவர்கள் வந்த கார் நேற்று காலை 6 மணியளவில் திருமங்கலம் – ராஜபாளையம் ரோட்டில் வந்தபோது, எதிரே வந்த டவுன் பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் குழந்தை சிவானிகா, உறவினர் சௌந்தரராஜன் (50) ஆகியோர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்