திருமங்கலம்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காடனேரியை சேர்ந்தவர் செந்தில் (எ) சென்றாயபெருமாள் (36). மனைவி பிரியங்கா (30). மகள் சிவானிகா (2). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து மதுரை நோக்கி காரில் புறப்பட்டார். இவர்கள் வந்த கார் நேற்று காலை 6 மணியளவில் திருமங்கலம் – ராஜபாளையம் ரோட்டில் வந்தபோது, எதிரே வந்த டவுன் பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் குழந்தை சிவானிகா, உறவினர் சௌந்தரராஜன் (50) ஆகியோர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.