பஸ்சில் தீ: 67 பேர் தப்பினர்

சோமனூர்: சேலத்தில் இருந்து நேற்று மதியம் அரசு பஸ் 67 பயணிகளுடன் கோவை வந்துகொண்டிருந்தது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே வந்தபோது திடீரென பஸ்சின் முன்பக்கத்தில் கரும்புகை வெளியேறியது. உடனடியாக டிரைவர் சிவக்குமார் சாலையோரத்தில் பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அலறியடித்தபடி பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சூலூர் தீயணைப்பு துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Related posts

கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது