3 கி.மீ. தூரம் பேருந்திற்கு வழிவிடாமல் அடம்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்: ஹாரன் அடித்ததால் அரிவாளைக் காட்டி மிரட்டல்

கேரளா: கேரள மாநிலம் மலப்புரம் அருகே ஹாரன் அடித்த தனியார் பேருந்து ஓட்டுனரை அரிவாளை காட்டி ஆட்டோ ஓட்டுநர் மிரட்டிய காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. மஞ்சேரியில் இருந்து கோழிக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பயணிகளை ஏற்றி செல்ல பேருந்து நிறுத்தப்பட்ட போது ஆட்டோ முந்தி சென்றது. பின்னர் பேருந்து ஓட்டுநர் ஆட்டோவை முந்த முயன்றார்.

தொடர்ந்து வழிவிடாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆட்டோ சென்றது அப்போது வழிவிடுமாறி கூறி பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்த நிலையில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை எடுத்துக்காட்டி முடிந்தால் முந்தி செல் என்ற தோனியில் மிரட்டல் விடுத்தார். இது குறித்த காட்சிகளுடன் பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் மதுபோதையில் அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் ஷம்சுதீனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்