பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதல்

*38 பேர் படுகாயம்

விருத்தாசலம் : பண்ருட்டியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்துக்கு பின்னால் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து ஒன்று சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

முதலில் சென்ற பேருந்து புதுக்கூரைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த மற்றொரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. பேருந்துகள் மோதிக்கொண்ட சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இரண்டு பேருந்துகளிலும் இருந்த பயணிகளை
மீட்டனர்.

தொடர்ந்து காயமடைந்த அடைந்த 38 பேரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மந்தாரகுப்பம் சின்னதுரை மகன் விமல்ராஜ்(19) மற்றும் குறிஞ்சிப்பாடி கஜேந்திரன் மகன் சசிதரன்(37) ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சென்று, மற்ற பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ: எல்டராடோ விமான நிலையத்துக்கும் பரவியதால் பதற்றம்

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்ற இடதுசாரி கட்சி: தோல்வி காரணமாக ஆளுங்கட்சி தரப்பில் போராட்டம்