இந்நிலையில் மீட்பு பணிகளை விரைவுபடுத்திட சர்வதேச நாடுகளின் உதவியை பப்புவா நியூகினியா கோரியுள்ளது. நிலச்சரிவினால் சுமார் 2000 பேர் உயிருடன் மண்ணில் புதைந்துள்ளதாகவும், பெரிய அழிவை சந்தித்துள்ளதாகவும், எனவே சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக விமானம் மற்றும் பல்வேறு உபகரணங்களை வழங்குவதற்கு ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.