மதுரை: மாட்டுவண்டி பந்தயம் நடத்துவது குறித்து வகுத்த விதிமுறைகளை சுற்றறிக்கையாக அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மேலும், சுற்றறிக்கை அடிப்படையில் மாட்டுவண்டி பந்தயத்துக்கு அனுமதி வழங்கலாம் என தஞ்சாவூரை சேர்ந்த ரவி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.