10ம் நாளான நேற்று அலகு பானை எடுத்தல் நிகழ்ச்சியும் மாலையில் தீமிதி திருவிழாவும் நடந்தது. விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், துணைத் தலைவர் பேபி மனோகரன், முன்னாள் கவுன்சிலர் பி.கே.இ.கபிலன், கலைச்செல்வி மோகனசுந்தரம் வார்டு உறுப்பினர் தமிழ்புதல்வன் மற்றும் புல்லரம்பாக்கம், திருவள்ளூர், நெய்வேலி, சதுரங்கப்பேட்டை, பூண்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் 8 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பி.கே.ஏழுமலை, டி.புத்தமணி, கே.வி.சண்முகம், எஸ்.தர், எஸ்.சரத்குமார், ராஜ்மோகன், ஏசுராஜ், எம்டி மதியழகன் ஏ.ராஜ்குமார், எம்.அன்பில் சுமன் மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.