வீடு கட்ட கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியாகும் செய்திக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு

சென்னை: வீடு கட்ட கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியாகும் செய்திக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. நடுத்தர மக்கள் சுயசான்றின் அடிப்படையில் எளிமையாக கட்டிட அனுமதி பெறுவதை தடுக்க தவறான கருத்து பரப்பப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

சுயசான்றிதழ் அடிப்படையில் விண்ணப்பிப்போருக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.100 வசூலிக்கப்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயசான்றின் அடிப்படையில் தர நிர்ணயித்த கட்டணத்திற்கும் ஏற்கனவே உள்ள கட்டணத்திற்கும் (ச.அ. ரூ.99.70) வித்தியாசம். கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

Related posts

தொடர் விடுமுறையால் குவிந்தனர் கொடைக்கானலில் விடுதிகள் ‘ஹவுஸ் புல்’

தமிழகம் முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் `சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன்’

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்