தற்போது இதை ஒன்றிய மைனாரிட்டி அரசு அரசியல் ஆயுதமாக மாற்றி உள்ளது. நமக்கு நீர் பிரச்னையும் முக்கியம். நிதி பிரச்னையும் முக்கியம். நாங்கள் பிரிவினையை கேட்கவில்லை. தமிழ்நாட்டின் வரிப்பணத்தை நீங்கள் மற்றவர்களுக்கு வாரி கொடுக்கிறீர்கள். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ‘நான் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நன்மை செய்வேன்’ என்றார். அதுதான் இந்த அணியினுடைய வெற்றி. கலைஞர் உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றார். அது எந்த உரிமையாக இருந்தாலும் அந்த உரிமைக்காக கட்சி இல்லை, மதம் இல்லை. அனைவரும் ஒன்று சேர்வோம். போராடுவோம். வெற்றி பெறுவோம்.