சென்னை : சென்னை பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய் கசிந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்தது. வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்ததால் உடல்நலம் பாதிப்பு என புகார் எழுந்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் அல்லது நாளை காலை பசுமைத் தீர்ப்பாயம் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.