நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர். சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக நிற்கும் போது எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைத்தவர் நபிகளார் அவர்கள்.
வீரம், தியாகம், ஒழுக்கம், தூய்மையான அரசியல், யாருக்கும் அஞ்சாமை உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளுக்கு சொந்தக்காரராகவும் நபிகள் நாயகம் திகழ்ந்தார். மிலாது நபியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது X தள பதிவில்; மீலாது நபி நல்வாழ்த்துக்கள். சகோதரத்துவமும் கருணையும் நம் சமூகத்தில் வளரட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ரமலான் என்று பதிவிட்டுள்ளார்.