Tuesday, September 17, 2024
Home » தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து அக்கா தற்கொலை: திருவள்ளூர் அருகே பாசப்பிணைப்பு

தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து அக்கா தற்கொலை: திருவள்ளூர் அருகே பாசப்பிணைப்பு

by Mahaprabhu

திருவள்ளூர்: பூச்சி மருந்து குடித்து அக்கா உயிரிழந்தார். தம்பியின் மரணத்தால் வேதனையில் இருந்த அவர் இந்த துயர முடிவை எடுத்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (68). இவருக்கு 2 மகள்கள், 1 மகன். இந்த நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு அவரது மகன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தார். இதன்பிறகு குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். அவரது இளைய மகள் கலைச்செல்வி(42) தனது தம்பியின் மரணம் குறித்து மிகுந்த கவலையுடன் காணப்பட்ட நிலையில், யாருடனும் சரிவர பேசாமலும் சாப்பிடாமலும் இருந்துள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில், தம்பியின் மரணத்தை நினைத்து கடந்த ஜூலை மாதம் 26ம்தேதி அழுதுகொண்டிருந்த அவர் திடீரென வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்றிரவு கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்படி, கடம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தம்பி இறந்த சோகத்தில் அக்கா தற்கொலை செய்துகொண்டது கிராமத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

17 − seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi