Monday, September 9, 2024
Home » தம்பி இறந்த துக்கம் தாளாமல் பூச்சி மருந்து குடித்து அக்கா தற்கொலை

தம்பி இறந்த துக்கம் தாளாமல் பூச்சி மருந்து குடித்து அக்கா தற்கொலை

by Karthik Yash

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(68). இவருக்கு 2 மகள்கள் 1 மகன் இருந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாணிக்கத்தின் மகன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரழந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இளைய மகள் கலைச்செல்வி(42)என்பவர் துக்கம் தாளாமல் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி வீட்டில் பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதில் மயக்கமடைந்து வாயில் நுரைதள்ளி வீட்டில் படுத்திருந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த கலைச்செல்வி சிகிச்சைப்பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

10 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi