கத்தியால் வெட்டிக்கொண்ட அண்ணன், தம்பி படுகாயம்


பெரம்பூர், ஜூன் 29: அயனாவரம் தாகூர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (28), கார்பென்டர். இவரது தம்பி அருண் (23), மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். சரித்திர பதிவேடு ரவுடியான அருண் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் தாகூர் நகர் 1வது தெரு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுபாஷ் மற்றும் அவரது தாயாரிடம் அருண் தகராறில் ஈடுபட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்திக், அருணை வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொண்டனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை

பிரசந்தா பதவி விலக வேண்டும்; நேபாளி காங்கிரஸ் கோரிக்கை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிரதமர் முடிவு?