பெரம்பூர், ஜூன் 29: அயனாவரம் தாகூர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (28), கார்பென்டர். இவரது தம்பி அருண் (23), மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். சரித்திர பதிவேடு ரவுடியான அருண் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் தாகூர் நகர் 1வது தெரு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுபாஷ் மற்றும் அவரது தாயாரிடம் அருண் தகராறில் ஈடுபட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்திக், அருணை வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொண்டனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.