செங்கல்பட்டு அருகே தண்ணீரில் மூழ்கி முதியவர் பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே தரைப்பால தண்ணீரில் மூழ்கிய முதியவர் பலியானார். செங்கல்பட்டு அருகே பாரதபுரம் லட்சுமிநகர் பகுதியில் உள்ள தரைப்பாலம் அருகில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆண் சடலம் மிதப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், தண்ணீரில் சடலமாக மிதந்தவர் செங்கல்பட்டு அருகே பாரதபுரம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (55) என்பது தெரியவந்தது. இவர் தரைப்பாலம் பகுதியில் குளிக்கும்போது மூழ்கி இறந்தாரா? அல்லது வேடிக்கை பார்க்கச் சென்றபோது தவறி விழுந்து இறந்தாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி