அப்போது, சிலிண்டரில் இருந்து அதிகப்படியான எரிவாயு வெளியேறியதால் திடீரென கடை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில், புவனேஸ்வரிக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த புவனேஸ்வரியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக செங்கல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.