மதுரை: லஞ்ச வழக்கில் 6 ஆண்டுகளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாதது அதிர்ச்சியாக உள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. லஞ்ச ஊழல் வழக்குகளில் போலீசார் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில்லை, இதனால் அரசு ஊழியர்கள் பிழைப்பூதியம் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக நடமாடுகின்றனர் என ஐகோர்ட் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.