லஞ்சம் வாங்கி கைதான செயற்பொறியாளர் சஸ்பெண்ட்

சேலம்: சேலத்தில் கான்ட்ராக்டரிடம் லஞ்சம் வாங்கி கைதான, ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் உள்பட 2 பேரை, கலெக்டர் பிருந்தாதேவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வரகூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். கான்ட்ராக்டரான இவர், தலைவாசல் பகுதியில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார். இதற்கு ₹90 லட்சம் கொடுக்க, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். இதற்காக ₹50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் இளநிலை வரைபட அலுவலர் சாகுல் அமீது ஆகியோர் கேட்டுள்ளனர்.

இதனை செந்தில் வழங்கிய நிலையில், மேலும் ₹61 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். இதையடுத்து அவர்கள் கூறியபடி கடந்த 20ம் தேதி, செந்தில் ₹61 ஆயிரத்தை கொடுக்க முயன்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி செயற்பொறியாளர் மற்றும் வரைபட அலுவலரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ரவிச்சந்திரன் மற்றும் சாகுல் அமீது ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்