திருப்பத்தூர்: லஞ்ச புகாரில் வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோட்டக் கலால் அலுவலராக பணியாற்றிய சாந்தியை வாணியம்பாடி வட்டாட்சியராக நியமித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியான நிலையில் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.