பெரம்பலூர்: பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான துணை வட்டாட்சியர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்றிதழ் தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். துணை வட்டாட்சியர் பழனியப்பன், விஏஓ நல்லுசாமி ஆசியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். கைது செய்தபோது பழனியப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தப்பி ஓடியுள்ளார்.