இதையடுத்து மார்பக புற்றுநோயை கண்டறிய, பரிசோதிக்க பிரத்யேக மருத்துவ ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்தியில் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மூலம் மார்பக புற்றுநோயை கண்டறியும் கையடக்க பரிசோனை கருவிகளை பொருத்தி உள்ளோம். இதன் மூலம் சோலாப்பூர் மாவட்டத்தின் நகர்ப்புற, கிராமப்புற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை செய்யப்படுகிறது. இந்த மாவட்டத்தில் 7 லட்சம் பெண்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 1,000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, சுமார் 5,000 பெண்களை பரிசோதித்துள்ளோம். அவர்களில் 64 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக சந்கேத்தின் பேரில் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்துக்காக நோயை கண்டறிவது முதல் சிகிச்சை வரை ஒரு பெண்ணுக்கு ரூ.20,000 வீதம் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு சரியான நேரத்தில் மார்பக புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவதே திட்டத்தின் நோக்கம்” என்று தெரிவித்தார்.