இதற்கு பதிலளித்துள்ள துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘தேவராஜ கவுடாவிடம் நான் ரூ.100 கோடி பேரம் பேசியிருந்தால் லோக்ஆயுக்தா அல்லது வேறு ஏதாவது ஏஜென்ஸியிடம் என் மீது புகார் கொடுக்கட்டும். அவருக்கு மனதளவில் பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறேன். தேசிய மற்றும் மாநில ஊடகங்கள் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஊக்குவிக்கக்கூடாது. சிறையில் இருக்கும் ஒரு நபர் எப்படி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூற அனுமதிக்கலாம்? இதுகுறித்தெல்லாம் கருத்து கூறவே நான் விரும்பவில்லை. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க செய்வதில் காங்கிரஸ் அரசு உறுதியுடன் செயல்படுகிறது. எஸ்.ஐ.டி சரியான முறையில் விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும்’ என்றார்.