விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்..!!

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த முனியம்மாள் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் முனியம்மாள் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு பைக்கில் வீட்டிற்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முனியம்மாளை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தலையில் அடிப்பட்டதால் ரத்தக்கசிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முனியம்மாள் நேற்று மூளைச்சாவு அடைந்தார். மூளைச்சாவு அடைந்த முனியம்மாளின் கல்லீரல், 2 கண்கள், சிறுநீரகம் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது. கோவை, சேலம் அரசு மருத்துவமனைகளில் தலா ஒரு சிறுநீரகமும் கோவை தனியார் மருத்துவமனைக்கு கல்லீரலும் அனுப்பப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட முனியம்மாளின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டன.

Related posts

கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து டெல்லியின் புதிய முதல்வராகிறார் அடிசி: ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மாநில அரசுகளுக்கு அனைத்து அதிகாரம்: சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம், திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்