சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அதிநவீன மூளை ரத்தநாள ஆய்வகம் திறக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ரூ.13 கோடியில் அதிநவீன மூளை ரத்தநாள ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். மேலும், சென்னை, மதுரையை தொடர்ந்து கோவை, சேலம் அரசு மருத்துவமனைகளில் கருத்தரித்தல் மையம் அமைக்கப்படும் என அவர் கூறினார்.