திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரிமோலின் விண்ணரசியுடன் லெனின் கிராஸ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வெளிநாடு சென்ற லெனின் கிராஸ், காதலிக்கு மாதம் ₹5 ஆயிரம் அனுப்புவாராம். வெளிநாட்டில் இருந்தும் வாட்ஸ் அப்பில் தினமும் பேசி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லெனின் கிராஸ் சொந்த ஊர் திரும்பினார். பெற்றோர் அவருக்கு குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்த பெண்ணை பார்த்து கடந்த 11ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர்.
அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணத்திற்காக அனைவரும் கூடியிருந்தனர். இதுபற்றி அறிந்த ரிமோலின் விண்ணரசி அந்த தேவாலயத்துக்கு வந்து, பங்குத்தந்தையிடம் முறையிட்டார். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. பின்னர் அவர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய்தார். இதையடுத்து குளச்சல் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். முன்னதாக லெனின் கிராஸ், இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து போட்டோக்களையும் அழித்து விட்டார். இதனால் போலீசாரால் முடிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் விண்ணரசி கூகுள் இணைய தளத்திலிருந்து ‘போட்டோ ரெக்கவரி’ மூலம் போட்டோக்களை மீட்டு போலீசாரிடம் காண்பித்தார். இதையடுத்து ரிமோலின் விண்ணரசியை திருமணம் செய்யும்படி லெனின் கிராசுக்கு போலீசார் அறிவுரை கூறினர். அதற்கு சம்மதித்த அவர், நேற்று முன்தினம் இரவு குளச்சலில் ஒரு குருசடி முன்பு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.