காதலனுடன் வசித்து வந்த இளம்பெண் தற்கொலை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (23), தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு எல்.எல்.பி படித்து வருகிறார். இவர், திருச்சியை சேர்ந்த ஐஸ்வர்யா (22) என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக சதீஷ்குமாருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த ஐஸ்வர்யா, நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை

வண்டலூர் தானியங்கி மழைமானி நிலையத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு

பேருந்திற்காக நின்று கொண்டிருந்த துணை நடிகைக்கு பாலியல் சீண்டல்: வடமாநில வாலிபர் கைது