இந்நிலையில் நர்சிங் பெண்ணுடன் காதலன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதாக காதலிக்கு தெரியவந்தது. இதனையடுத்து மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நர்சிங் பெண்ணிடம், அந்த வாலிபரின் காதலி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி போகவே பேருந்து நிலையத்திலேயே இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.
இதில் காதலி, நர்சிங் மாணவியை சரமாரியாக தாக்கினார். தலை முடியை பிடித்து இழுத்து தரையில் புரட்டி, புரட்டி எடுத்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர். 2 பெண்கள் சண்டை போடும் வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வைரலானது. இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.