காரைக்கால்: திருப்பட்டினத்தில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே திருப்பட்டினத்தை சேர்ந்த சந்தோஷ் (13) என்ற எட்டாம் வகுப்பு மாணவன் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். திருப்பட்டினத்தில் நாகப்பட்டினம் – காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் திருமலைராஜன் ஆற்று பாலத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பலியான சிறுவன் சந்தோஷின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுவன் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடலில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயங்கள் இருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் கையுறைகள் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சந்தோஷ் உடன் இருந்த 19 வயது இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறையில் சுற்றி திரிந்த கொலையாளியை புதுச்சேரி காவல்துறை கைது செய்தது. கைதான இளைஞரை காரைக்காலுக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.