காரைக்கால்: திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் உடலில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயங்கள் இருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சந்தோஷ் உடன் இருந்த 19 வயது இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் கையுறைகள் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.