ஆனால் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கன்னியாகுமரி மறக்குடி தெருவில் உள்ள லாட்ஜ் அருகில் சகாயம் மதுபோதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரால் தாக்கப்பட்ட சிறுவன் நண்பர்கள் 2 பேருடன் நின்று கொண்டிருந்தார். ஏற்கனவே தன்னை அடித்ததற்கு பழி தீர்க்கும் வகையில், மூன்று பேரும் சேர்ந்த சகாயத்தை தாக்கினர். பின்னர் சிறுவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது நெஞ்சில் குத்தினார். பாய்ந்த வேகத்தில் கைப்பிடி மட்டும் கழன்றுவிட நெஞ்சில் இருந்து கத்தி வெளியே வரவில்லை. இதில் அவர் அப்படியே மயங்கி விழுந்து உயிரிழந்தார் இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை கைது செய்தனர்.