அப்போது, முகேஷுக்கும் அந்த இளம் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, முகேஷ் அந்த சிறுமி காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி, 16 வயது சிறுமியை, முகேஷ் அழைத்த இடத்திற்கெல்லாம் சென்றுள்ளார். அப்போது, முகேஷ் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.