வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்குமாறு சிறார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அதிகார வரம்புக்கு உட்படாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோபத்துக்கு மத்தியில் சிறுவனின் வயதை கருத்தில் கொள்ளாமல் உத்தரவை கொடுத்துள்ளனர். சிறார் நீதிச் சட்டத்தின் படி சிறுவன் இழைத்தது குற்றமாகவே இருந்தாலும் அவர் குழந்தையாகவே கருதப்பட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர். மேலும் சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கும் சிறார் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் அவரை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனர். சிறுவனை அவரது அத்தையின் பராமரிப்பில் ஒப்படைக்குமாறும் நீதிபதிகள் கூறினர்.