இந்நிலையில், பெண்கள் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடியது, பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது, அனுமதியின்று பேனர் வைத்தது உள்ளிட்ட புகார்கள் மீது செங்கம் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் செங்கம் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுவனை நேற்று போலீசார் கைது செய்து செங்கம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியின் உத்தரவின்பேரில், கடலூர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சிறுவனை போலீசார் அடைத்தனர்.