பெண்கள் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் கைது

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோயிலில் அனுமதியின்றி பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள் வைத்து வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

இந்நிலையில், பெண்கள் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடியது, பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது, அனுமதியின்று பேனர் வைத்தது உள்ளிட்ட புகார்கள் மீது செங்கம் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் செங்கம் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுவனை நேற்று போலீசார் கைது செய்து செங்கம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியின் உத்தரவின்பேரில், கடலூர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சிறுவனை போலீசார் அடைத்தனர்.

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்