கோயிலில் சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு பூசாரி போக்சோவில் கைது

பெரியகுளம் : பெரியகுளத்தில் உள்ள கோயிலில் சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக திலகர் (70) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை கோயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், சிறுமிக்கு இனிப்பு தந்து கோயிலுக்குள் அழைத்து சென்று அவர்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் சிறுமி பதறியடித்து கோயிலில் இருந்து வெளியே ஓடிவந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோயில் முன் திரண்டனர். இதையடுத்து அச்சமடைந்த பூசாரி கோயிலுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
இதுகுறித்த தகவலின்பேரில் பெரியகுளம் வடகரை போலீசார் வந்து, பூசாரியைஅழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன், சிறுமியின் உறவினர்கள் பூசாரியை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், திலகரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுவன், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகரை கைது செய்துதேனி சிறையில் அடைத்தனர்.

Related posts

சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு