சென்னையில் 11 வயது சிறுவனை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்

சென்னை: சென்னை மாங்காடு பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சிறுவனை ராட்வீலர் நாய் கடித்தது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சென்னையை அடுத்த மாங்காட்டில் வீட்டின் முன்பு நின்றிருந்த 11 வயது சிறுவனை, நடைப்பயிற்சிக்கு அழைத்து வரப்பட்ட ராட்வீலர் நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாங்காடு, கொழுமணிவாக்கம் சார்லஸ் நகரில், நாயின் உரிமையாளர், நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது, வீட்டின் முன்பு நின்றிருந்த சிறுவன் துஜேஷை ராட்வீலர் ராய் கடித்துக் குதறியுள்ளது. உரிமையாளரின் பிடியிலிருந்து நழுவி 11 வயது சிறுவனை நாய் கடித்துள்ளது.

நாய் கடித்து காயமடைந்த சிறுவன் துஜேஷ் பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த சிறுவனின் பெற்றோர் நாய் உரிமையாளர்கள் நீலா மற்றும் கார்த்திக் மீது மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!