போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

பூந்தமல்லி: சென்னை போரூர் ஏரியில் வீராணம் குழாய்களுக்கு அருகே சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்க முயன்றனர். சடலத்தை மீட்க முடியாததால் மதுரவாயல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தில் கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், இறந்து கிடந்த நபர் சுமார் 30 வயதுடைய ஆண் என்பதும் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்து இரண்டு நாட்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இறந்து போன நபர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர், முதுகில் பை மாட்டி கொண்டிருப்பதால் மேம்பாலத்தின் மேல் இருந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

பல்லாவரம், கூடுவாஞ்சேரி இடையே புறநகர் ரயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் ஆணை..!!

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி ..!!