Tuesday, September 17, 2024
Home » போரூர் அருகே பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் கைது: 3 இளம் பெண்கள் மீட்பு

போரூர் அருகே பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் கைது: 3 இளம் பெண்கள் மீட்பு

by Karthik Yash

பூந்தமல்லி: போரூர் அருகே பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம் பகுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலையடுத்து வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் போரூர் அடுத்த காரம்பாக்கம், ராஜேஸ்வரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அந்த வீட்டில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த காரம்பாக்கத்தை சேர்ந்த கஸ்தூரி(53), என்ற பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார் விசாரணைக்குப் பிறகு புரோக்கர் கஸ்தூரியை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

19 − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi