போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

பூந்தமல்லி: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பரிதாபமாக பலியானார். சென்னை போரூர், பாளையகார தெருவை சேர்ந்தவர் நித்யா (எ) நித்தியானந்தம்(40). இவர், பொக்லைன் இந்திரங்களை வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், நித்யானந்தம் அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் நேற்று போரூர் ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகளில் சிக்கி நீரில் மூழ்கினார்.

இதையடுத்து உடன் இருந்தவர்கள் அவரை மீட்பதற்கு முயற்சி செய்தும் முடியவில்லை. தகவலறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, ஏரியில் மூழ்கிய நித்தியானந்தத்தை சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போரூர் போலீசார் நிதயானந்தத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் காலி பணியிடம் எத்தனை?.. ஐகோர்ட் கிளை

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100வது நாள்: ராகுல் வெற்றிகளை குவிக்க வேண்டும்.! செல்வப்பெருந்தகை வாழ்த்து