இவர்கள் பாகிஸ்தான் எல்லை செயல் குழுவை (பிஏடி) சேர்ந்தவர்கள் என ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த குழுவில் பாகிஸ்தான் வீரர்களும், தீவிரவாதிகளும் இருப்பார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய தரப்பில் வீரர் மோகித் ரத்தோர் வீரமரணம் அடைந்தார். கேப்டன் உட்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, 2,000 வீரர்கள் கொண்ட எல்லை பாதுகாப்பு படையினர் 2 குழுவினர் ஒடிசாவில் இருந்து ஜம்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
3 தீவிரவாதிகள் தலைக்கு ரூ.15 லட்சம்: தோடாவில் கடந்த 16ம் தேதி நடந்த என்கவுன்டரில் கேப்டன் உட்பட 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 49 நாட்களில் 15 பேர் வீர மரணம்; பிரியங்கா காந்தி ஆவேசம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில்,’ கடந்த 49 நாட்களில் 14 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. அதில் 15 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் ’ என்றார்.