ஏடிபி டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில், மிக மூத்த வயதில் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி சாதனை படைத்துள்ள இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுக்கு (43 வயது), பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு பாராட்டு விழா நடைபெற்றது. கர்நாடக மாநில லான் டென்னிஸ் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், போபண்ணாவுக்கு பாரம்பரிய மைசூரு தலைப்பாகை அணிவிக்கப்பட்டதுடன் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.