ஐஏஎஸ் அதிகாரி மனைவி எழுதிய புத்தகம்: முதல்வர் வெளியிட்டார்

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி குமார் ஜயந்த் மனைவி எழுத்தாளர் ருச்சி ப்ரீதம் எழுதிய ‘தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு’ என்ற புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த புத்தகம், மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் கலையில் சமண மதத்தின் தாக்கத்தையும், தமிழ்நாட்டின் அடையாளத்தில் சமண மதத்தின் ஒருங்கிணைந்த பங்கினையும் எடுத்துக்காட்டுகிறது. சமண மத தாக்கம் குறித்த நுணுக்கமான விவரங்களுடன், மதத்திற்கு அப்பாற்பட்ட சமண மதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இப்புத்தகம் சமண மதத்திற்கும் தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்புகளை ஆராய்வதுடன், சமண மதத்தின் நீடித்த செல்வாக்கிற்கு சான்றாக விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உளுந்தூர்பேட்டையில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்!!

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

எவ்வளவு வேண்டுமோ நீக்குங்கள்.. உண்மையை உங்களால் மாற்ற முடியாது: ராகுல் காந்தி பதிலடி