மெட்ரோ ரயில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்: முதல்வருக்கு சிஐடியு கோரிக்கை

சென்னை: மெட்ரோ ரயில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராசன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சி.எம்.ஆர்.எல் தொழிலாளர்களுக்கு 10 ஆண்டுகளாக போனஸ் மறுக்கப்பட்டு வருகிறது. போனஸ் சட்டத்தின் உச்சவரம்பை கணக்கில் கொள்ளாமல்தான் அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் கருணைத் தொகையாக தீபாவளி நேரத்தில் வழங்கப்படுகிறது.

இதர அரசு நிறுவனங்களில் செயலில் இருக்கும் இந்த நியதியும் தங்களுக்கு பொருந்தாது என்று சி.எம்.ஆர்.எல் நிர்வாகம் தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான போக்கை முதல்வர் கைவிடச் செய்து, மெட்ரோ ரயில் தொழிலாளர்களுக்கும் போனஸ் கருணைத் தொகை வழங்க முதல்வர் ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்