வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை கைது செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்திய விமானம் இன்று லண்டனுக்கு செல்ல இருந்தது. இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மும்பையில் உள்ள விமானசேவை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் விமானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கிடைக்காததால் விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டு சென்றது. விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக துகைப் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.