திருவனந்தபுரம்: பம்பையில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தில் தீ பற்றி விபத்து ஏற்பட்டது. பேருந்தில் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.