ராமநாதபுரம்: பாம்பன் விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 18 பாம்பன் மீனவர்களை விடுவிக்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் பாம்பனில் 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.