சென்னை: சென்னை கிண்டியில் தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு மர்மநபர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்தபோது வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு புரளியை கிளப்பிய மர்மநபரை கிண்டி போலீசார் தேடி வருகின்றனர்.