சென்னை: பட்டினம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம், வித்யா மந்திர பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்பநாய் பிரிவினர் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.