டெல்லி: டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானம், ரன்வேயில் இருந்து அப்புறப்படுத்தி தனியாக நிறுத்தப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து இண்டிகோ விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர கதவு வழியாக பத்திரமாக வெளியேற்றபட்டனர்.