சென்னையில் பரபரப்பு; 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை

சென்னை: சென்னையில் 17 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. அண்ணாநகர், பாரிமுனை, முகப்பேர், ஓட்டேரி, கோபாலபுரம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளது. திருமழிசையில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிகளில் இருந்து தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்கின்றனர். மேலும் பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுப்பட்டுள்ளன. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என போலீசார் தெரிவித்துள்னனர்.

மேலும், மிரட்டல் மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் செய்தி அறிந்து பெற்றோர் பள்ளிகளில் திரண்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

 

 

 

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி